Latest Games :
Home » » ஐஸ்வர்யாராயிடம் என்ன பேசினேன்? நடிகர் பார்த்திபன் விளக்கம்

ஐஸ்வர்யாராயிடம் என்ன பேசினேன்? நடிகர் பார்த்திபன் விளக்கம்

Tuesday, March 16, 2010 | 0 comments

எந்த விழாவாக இருந்தாலும் பார்த்திபன் இருந்தால் கலகலதான்! அதிலும் ஐஸ்வர்யாராய் நேரில் வந்தால் என்ன நடந்திருக்கும்? யெஸ்... பார்த்திபனின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் டென்ட்டுல்கர் ஸ்டெமினா!

சுமாரா ஒரு பொண்ணு வந்தாலே ஐஸ்வர்யாராய் மாதிரி அழகுன்னு சொல்லுவேன். ஐஸ்வர்யாராயே இங்கு வந்திருக்கிறார். என்ன சொல்றதுன்னு தெரியலே. அவங்க கன்னத்திலே விழுற குழியை வேணும்னா ரெட்ட சுழின்னு சொல்லலாம். அவங்க வெறும் உலக அழகி மட்டுமல்ல. ஏழைகளுக்கு சேவை செய்யணும்னு அவங்களுக்கு ஆசை இருக்கு. மருத்துவம் படிச்சிட்டு இருக்காங்களாம். இவங்க நர்ஸ்சா வந்தா பேஷண்டோட கதி என்னாவறது? நான் வாழ்நாள் முழுக்க பேஷண்டாவே இருக்கேன்னு சொல்லிட மாட்டாங்களா?

பொதுவா இனிப்பை நாக்குல வச்சா இனிப்பு கரைஞ்சு போகும். ஆனால் நாக்கே கரைஞ்சு போனா எப்படியிருக்கும்? அப்படிதான் இருக்கு இப்போ என்றார் அடுக்கடுக்கான வார்த்தை ஜாலங்களுடன்! ஆச்சர்யம் என்னவென்றால் ஐஸ் இதையெல்லாம் புரிந்து ரசித்துக் கொண்டிருந்ததுதான். (தமிழில் பேசவில்லையே தவிர நன்றாகவே புரிந்து கொள்கிறார்)

ஆனால் அவருக்கு தமிழ் புரியாது என்று நினைத்த பார்த்திபன் தான் பேச போவதற்கு முன்பே என்ன பேசப் போகிறோம் என்பதை ஒரு தாளில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஐஸ் கையில் கொடுத்துவிட்டுதான் மைக்கையே பிடித்தார். பேசிவிட்டு அமர்ந்த பின் அவரும் இவரும் சில வார்த்தைகள் பேசிக்கொண்டார்கள். அப்படி என்னதான் பேசியிருப்பார்கள். நமக்கும் ஒரே ஆர்வம். பார்த்திபனிடமே கேட்டுவிடுவேமே? கேட்டால், அதுவா... என்று பேச ஆரம்பித்தார்.

அவங்களுக்கு தமிழ் தெரியாது. நாம பேசும் போது எல்லாரும் கைதட்ட, அவங்க மட்டும் என்ன ஏதுன்னு புரியாம முழிச்சிட்டு இருக்க கூடாதில்லையா? அதுக்காக நான் வார்த்தைக்கு வார்த்தை மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி ஆங்கிலத்தில மொழி பெயர்த்துகிட்டு இருந்தாலும் நல்லாயிருக்காது. அதனால் அவங்களுக்கு நான் என்ன பேசப் போறேன்னு ஆங்கிலத்தில எழுதி கொடுத்திருந்தேன். நான் பேசிட்டு அமர்ந்ததும் என்னை பற்றி இவ்வளவு தகவல்கள் எப்படி சேகரிச்சீங்க என்று ஆச்சர்யமா கேட்டாங்க. அவங்களுக்கும் எனக்கும் தெரிஞ்ச பொதுவான நண்பர் பெயரை சொன்னேன். அவங்களுக்கு ரொம்ப சர்ப்ரைசா இருந்திச்சு என்றார்.

பார்த்திபனின் பேச்சுக்கு நேற்றிரவில் இருந்தே சினிமா வட்டாரத்திலிருந்து ஒரே பாராட்டு மழையாம். நடிக்க வரலைன்னா என்ன பண்ணியிருப்பீங்கன்னு நடிகைகிட்ட கேட்டா அடுத்த டேக் போயிருப்பேன்னு சொல்ல வேண்டியதுதானே? ஆனா டாக்டராயிருப்பேன்னு சொல்வாங்க என்று போகிற போக்கில் ஒரு ஜோக் அடித்திருந்தார் பார்த்திபன். இந்த ஜோக்குக்குதான் ஏராளமான பாராட்டுகளாம்!
Share this article :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Suren Pages - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger