Latest Games :
Home » » ஐஸ்வர்யாராய் குழந்தை பெறுவது எப்போது? பார்த்திபன் ஏடாகூ‌டம

ஐஸ்வர்யாராய் குழந்தை பெறுவது எப்போது? பார்த்திபன் ஏடாகூ‌டம

Tuesday, March 16, 2010 | 0 comments

ரெட்டைச்சுழி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்தது சந்தோஷமாக இருந்தது என்று டைரக்டர் பாலசந்தர் கூறினார். ஐஸ்வர்யா ராய் குட்டி போடுவது எப்போது? என்று நடிகர் பார்த்திபன் ஏடாகூடமாக பேசினார்.

டைரக்டர் ஷங்கர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ரெட்டைச்சுழி. இப்படத்தில் டைரக்டர்கள் பாலசந்தர், பாரதிராஜா இணைந்து நடித்திருக்கிறார்கள். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டு ‌பேசினார்.

விழாவில் பேசிய பலரும் ஐஸ்வர்யா ராயின் அழகை ரொம்பவே வர்ணித்து பேசினார்கள். நடிகர் பார்த்திபன் பேசுகையில், தனக்கே உரிய பாணியில் பல கவிதை வரிகளை கொட்டினார். சுமாரா ஒரு பொண்ணு வந்தாலே ஐஸ்வர்ய ராய் மாதிரி அழகா இருக்கான்னு சொல்லுவேன். ஐஸ்வர்யா ராயே இங்கு வந்திருக்கிறார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு சுனாமியே ஸ்டேஜ்ல வந்து உட்கார்ந்திருக்கிறது. ஐஸ்வர்யா ராய் சிரிக்கும்போது கன்னத்தில் விழுகிற கன்னக்குழியை ரெட்டைச்சுழி என்றும் சொல்லலாம் என்று கூறிய பார்த்திபன், கொஞ்சம் விவகாரமாகவும் பேசினார். விழா அழைப்பிதழில் ஆடியோ சி.டி.,யை ஐஸ்வர்யா ராய் வெளியிட வைரமுத்து பெற்றுக் கொள்வார் என்று போட்டிருந்தார்கள். நாங்களும் அவர் எப்போ பெற்றுக் கொள்வார்... பெற்றுக் கொள்வார் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த 50 கே.ஜி. தாஜமஹால் குட்டி போட்டால் அந்த குட்டி 5 கிலோ தாஜ்மஹாலாகவாவது இருக்கும் அல்லவா? அந்த குட்டி எப்போன்னுதான் எதிர்பார்த்திட்டு இருக்கோம், என்று ஏடாகூடமாக பேசி கைத்தட்டல் பெற்றார் பார்த்திபன்.

டைரக்டர் பாலசந்தர் பேசுகையில், நான் இந்த விழாவுக்கு வரும்போது படத்தின் டிரைலரை பார்க்கும் சந்தோஷ்த்தில் வந்தேன். மேடையேறியதும் சந்தோஷம் இரட்டிப்பாகி விட்டது. ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்த சீட் எனக்கு. இந்த கிழவனுக்கு என்ன ஆசைன்னு நினைக்காதீங்க. அழகை ஆராதிக்க வயசு ஏது? ஆனா... ஆராதிக்கிறதோட விட்டுறணும், என்றார்.

பாரதிராஜா பேசும்போது, எனக்கு சீட் கொஞ்சம் தூரமா போட்டுட்டாங்க. ஐஸ்வர்யா ராய்க்கு அற்புதமான கண்கள் இருக்கிறது. சிரிப்பில் கர்வம் இல்லை. கர்வம் இல்லாத பொண்ணு. அதுதான் அவருக்கு சொத்து, என்றார்.
Share this article :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Suren Pages - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger